Jun 25, 2011

பாரதி கண்ட புதுமைப்பெண் இவளா???யாழில் பெண்களின் சிரழிவுகள்



வணக்கம் நண்பர்களே மீண்டும் ஒரு பதிவுடன் உங்களை சந்திப்பதில் சந்தோசம் தான்.சரி இந்த பதிவு நம்ம சமூக பிரச்சினை சம்பந்தப்பட்டது தான் ஒன்றும் பெருசா இல்ல நம்ம சமூகத்தில் பெண்கள் மேற்க்கொள்கிற கலாச்சார சீரழிவுகள் பற்றி தான் சொல்லப்போறேன். நீங்க(பெண்கள்) கேக்கிறது புரியுது என்ன ஆண்கள் கலாச்சார சிரழிவுகளை செய்யவில்லையா  என்று ஆனா அது எப்படி நியாயம் எல்லாத்திலையும் பெண்களை தான் இலரும் முன்னுக்கு வைத்து கதைப்பாங்க நான் மட்டும் எப்படி மாத்திச்செய்யிறது??? பிறகு நீங்க(ஆண்கள்) எல்லாம் என்ன சொல்லுவீங்க ?? அதான் நான் பேசாம முதலாவதாக பெண்கள் பற்றியே சொல்லிவிடுகிறேன்(சகோதரிகளே கோபம் வேண்டாம் என் மேல ) சரி நான் தொடங்கிறேன் சொல்ல. நம்ம தமிழ் சமூகம் என்றுமே பெண்களை தான் அதிக மாரியாதை கொடுத்து வந்துள்ளது ஒரு பெண்ணுக்கு ஒரு சிறு அவமானம் என்றாலும் பொங்கி எழுந்தவர்கள் நம் சமூகதவர் அந்தளவுக்கு நம் சமூகம் பெண்களை மதித்து மதிகின்றது ஆனால் இன்று நம் தமிழ் சமூகத்தில் ஒரு சிறு கலாச்சார மாற்றம் ஏற்பட்டு வருவதை நாங்கள் வெளிப்படையாவே காண்கின்றோம் அதை இல்லை என்று மறுக்கவும் இயலாது ஏன் என்றால் நம் பத்திரிகைகள்,தொலைக்காட்சிச்செய்திகள் போன்றவற்றில் நாங்கள் பார்க்கிறோம்.ஏன் இந்த ஒரு மாற்றம் நம் சமூகத்தில் ஒரு கேள்வி எழுகின்றது என்னிடத்தில்(உங்களுக்கும் வரும் வரவில்லை என்றால்  நான் என்ன செய்வது???) என்னை பொறுத்த வரையில் இந்த மாற்றத்துக்கு காரணம் என்று நான் கருதுவது தொலைபேசி,இணையம்,இந்திய தமிழ் திரைப்படங்கள்(நான் எல்லோரையும் சொல்லவில்லை சமூகத்தின் ஒரு சிலரை மாத்திரமே குறிப்பிடுகிறேன்). ஆரம்ப காலங்களில் இந்த தொலைபேசி,இணையம் என்பது செல்வந்த பொருளாகவே பார்க்கப்பட்டு வந்தது காரணம் அவை அதிகளவு பெறுமதியான பொருட்களாக பார்க்கப்பட்டு வந்தன ஆனால் இன்று அப்படியான ஒரு நிலை இன்று இல்லை தொலைபேசி மற்றும் இணைய வசதிகள் மலிந்து போய் கிடக்கின்றன.முன்னர் எல்லாம் ஒரு லைபேசி மற்றும் இணைய வசதியை பெற வேண்டும் என்றல் எவ்வளவோ சிரமங்களை எதிர்நோக்கினோம் ஆனால் இன்று எங்கள் வீட்டுகளுக்கே வந்து சேவைகளை வழங்குகிறார்கள் அதை விட தொலைபேசி முன்னர் சில நிறுவனங்களின் உற்பத்தியே சந்தையில் கிடைத்து இதனால் அவை அதிகளவு பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருந்தது ஆனால் இன்று இந்திய மற்றும் சீனா தொலைபேசிகள் வருகை எல்லோர் கைகளிலும் தொலைபேசியை செல்லப்பிள்ளை ஆக்கிவிட்டது.இதனால் பெண்கள் தொலைபேசிகள் பாவிப்பது இணையம் பாவிப்பது அதிகமாக காணப்படுகிறது(அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு)  இதன் காரணமாக பல சீரழிவுகள் நம் சமூகத்தில் ஏற்படுகிறது சொல்ல கூட வெட்க்கமான விடயங்கள் நாடி பெறுகின்றன. சிலவற்றை உதாரணத்துக்கு சொன்னால் இளவயது காதல்கள், பல ஆண்களுடன் ஒரு பெண் நட்பு கொள்வது(நட்பு என்ற போர்வையில் கூத்து அடிப்பது), ஆபாச படங்கள் பார்ப்பது இதைவிட இணையத்திலே Facebook அரடை அடிப்பது (தெரியாத ஆண்களுடன் அரட்டை அடிப்பதை தான் சொல்கிறேன்) Videochat (முகம் பார்த்து தான் கதைக்கணும் ஆனால் இங்கே அது இல்லை),இன்னயங்கள் மூலம் வெளிநாட்டு ஆண் நண்பர்கள் பழக்கம் இப்படி சொல்லக்கூடியவற்றை சொல்லிவிட்டேன் இதை விட சொல்ல முடியாத பல அரங்கேறுகின்றது(சொல்லியா தெரியனும்).சரி இவ்வாறான சம்பவங்களுக்கு சில உண்மைச் சம்பவங்களை கூறி முடிக்கலாம் என்று நினைக்கின்றேன்.முதலாவதாக  அண்மையில் குடாநாட்டு பத்திரிகைகளில் பரவலாக வெளியான இரண்டு  செய்திகள் 1) இரண்டு பெண்பிளைகள்  குளிர்பான  சாலைகுச்சென்று குளிர்பானம் அருந்தியவாறு தொலைபேசியையே பலமணி நேரங்களாக  பார்த்த வண்ணம் இருந்தனர் எனவும்பின் memory card ஐ கழற்றி தமது கைப்பைக்குள் வைத்த போது அது தவறி விழ அதை எடுத்து பார்த்த கடை   பணியாளர் அதில் பல ஆபாச படங்கள் சேகரித்திருப்பதை பார்த்து  பத்திரிகைக்கு தெரிவித்த தகவலும்அடுத்து ஒரு பெண் பல ஆண் நண்பர்களுடன் குளிர்பான சாலைக்கு சென்று  மகிழ்ச்சியாக இருந்தவேளை அப்பெண்ணிற்கு வந்த தொலைபேசி அழைப்பில் 'அம்மா இப்பொழுதுதான் கணித பாடம்  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது 'என்று அவர் கூறியதாகவும் அங்கு இதை அவதானித்த ஒருவர் பத்திரிகைக்கு குறிப்பிட்ட தகவலையும் எடுத்துக்காட்டாக குறிப்பிடமுடியும்.இதைவைத்து பார்க்கும் போது ஆண்களை விட பெண்களே அதிக சீர்கேட்டிற்கு ஆளாகின்றமை வருந்ததக்கது எனலாம் .மேலும் மேல்நாட்டு கலாசார மோகம் யாழின் சீரழிவில் அப்பட்டமாக தென்படுகிறது  என்பதற்கு சுப்பிரமணியம் பூங்காவில் காதல் எனும் பெயரில் இளவயதினர்  செய்யும் அடாவடித்  தனங்களையும் :மற்றும் பிரபல பாடசாலை மாணவி  ஒருவர்  பாடசாலைக்கு செல்வதககூறி சீருடையுடன் சென்று பின் யாருக்கும்  தெரியாமல் வேறு உடை அணிந்து  தன் ஆண் நண்பனுடன்சுப்பிரமணியம்  பூங்காவில்தகாத செயலில் ஈடுபட்டமையை குறிப்பிட்டு கூறலாம் .
  • பெண்களின் சீரழிவுகு முக்கிய எடுத்துக்காட்டு யாழ் பொது  வைத்தியசாலையில் பிரபல பாடசாலை பெண் மாணவிகளுக்கு  மட்டுமென ஒதுக்கபட்டுள்ள முறையற்ற கற்பதை தவிர்க்கும் பிரிவை  சுட்டிக்காட்டலாம் ..
  •  அண்மையில் வெளியான மிகவும் பரபரப்பை ஏற்படுதிய செய்தி - ஒரு ௧௯ வயது  பாடசாலை மாணவி தன் முறையற்ற கற்பதை கலைப்பதற்காக  தன் பல்கலைகழக  மாணவரான ஆண்  நண்பருடன்  சேர்ந்து  கடத்தல்  நாடகமாடி போலீசாரை திசைதிருப்ப நினைத்து அகப்பட்டு கொண்ட  சம்பவத்தை குறிப்பிடலாம்

குடும்ப விளக்காக இருக்க வேண்டிய பெண்கள்(நம்ம Super Star ஏ சொல்லி இருக்கார் இல்ல சிவாஜி படத்தில்"யாழ்ப்பாண பெண்கள் தான் குடும்ப பெண்கள் என்று)  இவ்வாறு தெரு விளக்காக  மாற்றமடைந்ததமை  மனவருத்ததிர்க்குரியதாயினும்  பெண்களின்  இந்த  மாற்றத்திற்கு வேறு பல காரணங்கள் இருந்தாலும் ஆண்களே மிகமுக்கிய  காரணியாக கருதபடுகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மையே!

'பாரதி கண்ட புதுமைப்பெண் இவளா' ? பாரதியே நாணி நிற்கும் நிலை ; பெண்களினால் சீரழிவுகள் 

0 comments: