Jun 23, 2011

"பசு தோல் போர்த்திய புலி"அமெரிக்கா பாகம் 2

சென்ற பதிவில் குறிபிட்டு இருந்தேன் அமெரிக்கா கள்ள நாடகம் ஆடுகிறது என்று வெறும் வார்த்தைகளில் சொன்னால் போதுமா??உதாரணம் எங்கே என்று நீங்கள் கேட்டு விடக்கூடாது பாருங்கள் அதனால் நான் உங்களுக்கு சில நான் அறிந்தவற்றை குறிப்பிடுகின்றேன்..சரி சரி முதலாவதாக நாங்கள் ஈராக் மக்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையும்  கொண்ட அமெரிக்கா அவர்களுக்காக செய்கின்ற நடவடிக்கைகளை பார்த்து கண் கலங்குகின்றோம்...என்ன அமெரிக்காவா என்று நீங்கள் கேள்வி கேட்பது புரிகிறது ஆனாலும் அதனை இல்லை என்றும் நன் மட்டும் மறுத்தால் போதுமா?? உண்மையில் அமெரிக்கா ஈராக் மீது மேற்க்கொண்ட போர் நடவடிக்கை முழுக்க முழுக்க தன்  நலம் கருதி அமெரிக்க மேற்க்கொண்ட ஒரு நடவடிக்கை.போர் தொடுப்பதற்க்கு அமெரிக்கா கூறிய காரணம் ஈராக் பாரிய பயங்கரமான ஆயுதங்களை தனகத்தே கொண்டுள்ளது என்று அனால் இன்று வரை அதற்கான ஒரு சான்றை கூட அவர்கள் நிரூபித்துக்காட்டவில்லை ஏன் முடியவில்லை ?? அங்கே தானே  அப்படி ஒன்றும் ஒருபோதும் இருந்தது தான் இல்லையே..இந்த ஒரு சிறு காரணத்தை காட்டி தான் போர் தொடங்கினார்கள் ஆனால் உண்மை அவர்கள் சென்றது ஈராக்கில் இருந்த எண்ணெய் வளத்தை சுரண்டவே அது தான் அப்பட்டமான உண்மை சென்றது வெற்றி தான் ஆனால் இதனால் ஈராக் இன்று படும் பாடு சொல்லி தெரிய வேண்டிய ஓன்று இல்லை .. நாள் தோறும் குண்டு வெடிப்புகள்,உயிர் பலி இப்படி பல.... இவ்வாறு தன் நலத்தை  பாதுகாக்க
அமெரிக்கா செய்த ஒரு சிறந்த நாடகம் இது என்பது என் கருத்து.... இன்னும் கருத்துக்கள் தொடரும்  

0 comments: