Jun 24, 2011

தீராத பிரச்னை நம் யாழ்ப்பாண மின்சாரப்பிரச்னை......

யாழ்ப்பாணம் என்றுமே மீள முடியாமல் சிக்கி தவிக்கும் ஒரு பிரச்சனை சீரற்ற மின்சார விநயோகம்.என்னவோ தெரியவில்லை நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின்(1992) போது துண்டிக்கப்பட்ட சீரான மின் விநயோகம் இன்று வரை ஒழுங்காக எமக்கு கிடைக்கவில்லை.ஆரம்ப காலங்களில் லக்க்ஷபானவில் இருந்து நாம் மின்சாரம் பெற்றோம் அப்போதெல்லாம் வறட்சி காலங்களில் மாத்திரம் மின்சார தடைகளை அனுபவித்தோம் ஆனால் கடந்த இருபது வருடங்கள்ளாக நாம் இந்த சீரான மின்சாரத்தை பெறுவதில் அடிக்ககடி பிரச்சனைகளை முகம் கொடுக்கிறோம்.சரி யாழ்ப்பாணத்தின் இந்த மின்சார பிரச்சனைக்கான காரணம் என்ன வென்று நான் கருதுவதை உங்களுடன் பகிர்க்கிறேன்.   யாழ்ப்பாணத்துக்கு மின்சாரம் தடைப்பட்ட போது சுன்னாகத்தில் ஒரு துணை மின்சார நிலையம் அதாவது எரிபொருள் கொண்டு மின்பிறப்பாக்கிகளை  இயக்கி அதன் மூலம் மின்சாரத்தை வழங்கினார்கள்.இதன் ஆரம்ப கட்டம் சீரான சேவையை மேற்க்கொண்டது.அதற்க்கு இரண்டு காரணங்கள் ஓன்று அன்றைய நிலைமையில் இங்கு அதிகளவான வீடுகள் மின்சாரத்தை பெறவில்லை மற்றயது அவை புதிய இயந்திரங்களாக இருந்தன எனினும் கால போக்கில் மக்கள் பாவனை அதிகரிக்க அதிகரிக்க பிரச்சனைகளும் சேர்ந்தே அதிகரித்து எனவே மின்சார தேவைகள் அதிகரித்த வேளை அதாவது (1999-2003) அடிக்கடி மின்சார தடை ஏற்ப்பட அப்போது குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இரண்டு நிறுவனங்கள் இணைந்து ஓரளவு நிலைமையை சீர்செய்தன.Agrico  என்ற நிறுவனம் 15MV மின்சாரத்தையும் Cool Air என்ற நிறுவனம் 13MV மின்சாரத்தையும் வழங்கிக்கொண்டு இருந்தன எனினும் அதற்க்கான செலவுகள் அதிகமாக காணப்பட்டதால் அவைகள் 2006 ம் ஆண்டுடன் ஒப்பந்தந்தித்தில் இருந்து நீக்கப்பட்டு.பகுதியளவில் செயற்ப்பட புதிதாக Northern Power என்ற நிறுவனம் சேவையை வழங்க ஆரம்பித்தது ஆரம்பத்தில் 15MV மின்சாரத்தையும் பின்னர் 30MV மின்சார அளவுக்கு அதிகரிக்கப்பட்டு ஓரளவுக்கு சீரான விநயோகம் மேற்கொள்ளபட்டது.ஆனால் இவை ஏற்க்கனவே பாவிக்கபட்டவை என்பதனால் முழுமையான சக்தியை வழங்க முடியவில்லை எனவே ஓட்டுமொத்தம்மாக சேவையை வழங்கின பின்னர் 2009 ம் ஆண்டு Cool Air நிறுவனம் நிறுத்தப்பட்டது பின்னர் மீண்டும் பிரச்சனைகள் தலைதூக்கி பார்த்து சொல்லிச்சென்றன இன்னும் பிரச்சனை தீரவில்லை என்று.எனவோ தெரியவில்லை குறிப்பாக பரீட்சை காலங்களில் சொல்லி வைத்தால் போல மின்சார தடை ஏற்ப்படுவது ஓர் சாபமாக யாழ்ப்பாண மக்களுக்கு இருந்து வருகிறது. 2006 ம் ஆண்டு இணைக்கப்பட்ட Nothern power பின்னர் 2011 முதல் மாதம் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டு மீண்டும் Agrico  நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு Nothern Power இரண்டாம் ஒப்ந்தகாரராக கொண்டு யாழ்ப்பாணத்துக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது இபோது மீண்டும் ஒரு ஒபந்த மாற்றத்துக்கான பேச்சுக்கள் இடம் பெற்று வருவதாக ஒரு செய்தி எது எப்படியோ எங்களுக்கான மின்சாரம் ஒழுங்க்காக கிடைத்தால் சரி... இவ்வளவும் சொல்லியாச்சு இதையும் சொல்லிடு போறேன் இப்பொழுது மீண்டும் மின்சார தடை  யாழ்ப்பாணத்தில் அதுக்கும் சொல்ல போனால் ஒரு இரண்டு மணத்தியால மின் தடை இரவில் சரி அது தான் போனால் போகட்டும் என்று பார்த்தல் அதிகாலையும் அதே நிலைமை தான் ..எத்தனை பேர் இதனால் பாதிக்க படுகிறார்கள் தெரியுமா??? இதற்க்கு உடனே நம்ம Facebook,twiter.internet,chatting பாவிக்கிறவங்க என்று பதில் வந்தாலும் வரும் அந்தளவுக்கு நாம(நான் எல்லாரையும் சொல்லவில்லை  ஏதோ சொல்லுவாங்களே அதான் தொப்பி பொருந்தினால் எடுத்து பொட்டுக்கோ அதை தான் நானும் சொல்லிறேன் இப்ப)அதுக்கு அடிமையாகிடோம்   இந்த மின்சார தடை இவர்களுக்கு சிறந்த மருந்து தான் நான் மேல சொல்லவில்லை... சரி சரி மறு புறம் இதை விட இன்னும் ஒரு மாதத்தில் உயர் தர பரீட்சை எடுக்க போகும் மாணவர்கள் நிலை என என்பதை சற்று யோசித்து பாருங்கள். ஏதோ நாங்கள் செய்த பாவம் இப்படியான தடைகளை அடிக்கடி சந்திக்கிறோம் ஏதோ பழகிவிட்டது தான் என்றலும் ஒரு சிறு ஆதங்கம் அதான் அதை நான்  உங்களுடன்  பகிர்ந்துவிட்டேன்.. என்று தான் இதற்க்கான தீர்வு கிடைக்குமோ?? காலத்தின் கைகளில் தான் விடைகளை தேடவேண்டும்.... 

1 comments:

SShathiesh-சதீஷ். said...

யாழில் பிறந்தாலும் ஒரு சில நாட்கள் வந்து தங்கும் விருந்தினராகிவிட்ட எனக்கே இந்த கொடுமைகள் சலிப்பை தந்தது என்றால் அங்கேயே வாழ்பவர்களுக்கு என்ன சொல்ல. சமுக கருத்துடன் எழுதுகின்றீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.